இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில் இன்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உயிலங்குளம் முதலை குத்தி பகுதியை சேர்ந்த அந்தோனி தெய்வீகன்(வயது-45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பைக் கடவை பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )