புதிய ஜனாதிபதிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நேற்று (22) மாலை பத்தரமுல்லையில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார். 

இந்தியாவின் தலைமையிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார், இரு நாடுகளின் செழுமைக்காக உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதாக, உயர் ஸ்தானிகர் ‘X’ இல் பதிவிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் திஸாநாயக்க ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )