தேர்தல் சுவரொட்டிகளை நீக்கும் பணியில் பொலிஸ்

தேர்தல் சுவரொட்டிகளை நீக்கும் பணியில் பொலிஸ்

வவுனியாவில் தேர்தல் சுவரொட்டிகளை நீக்கும் பணியில் பொலிஸார் நேற்று ஈடுபட்ட னர்.

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரத்துக்கான இறுதிநாள் நேற்றாகும்.

நேற்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்துக்கும் அதிக பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணியில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20 இற்கும் மேற்பட்ட பொலிஸார் குறித்த பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )