நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் !

நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் !

ஊழல்வாதிகள் அங்கம் வகிக்கும் அரசியல் முகாம்களை இல்லாதொழிக்க மக்கள் தயாராக வேண்டும் என தேசிய மக்கள் கட்சியின் தலைவர் மஞ்சு நிசங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து
வெளியிடும்போதே அவர் இந்தவேண்டுகோளை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்த நாடு சுதந்திரமடைந்தது முதல் குழுக்கள் குழுக்களாக இணைந்து மாறி மாறி
ஆட்சியாளர்கள் ஆட்சிசெய்து வந்தனர்.

அவர்களைப் பற்றி நோக்கும்போது அதிகாரமோகமே அதிகமாகக் காணப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் போட்டியிடவில்லை.

எனினும் அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம்.

ஊழல்வாதிகளும் திருடர்களும் மோசடிக்கார்களும் குழுக்களாக இணைந்திருக்கிறார்கள்.

இந்த நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியோர் ரணில் விக்கிரமசிங்கவுடன்
கூட்டு சேர்ந்திருக்கிறார்கள்.

நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷ முகாமிலும் திருடர்களே இருக்கிறார்கள்.

நாட்டில் முறைமை மாற்றம் அவசியம் என்பதே காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது. அவ்வாறாயின் இந்த இரு தரப்பின
ரும் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டும். அதற்காக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது அவசியமாகும் ‘ என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )