மலேசியாவில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு

மலேசியாவில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு

மலேசிய உணவகமொன்றில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது கொதிகலன் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். 

 உயிரிழந்த இளைஞன் 24 வயதான மஸ்கெலியா பிரவுன்சிவிக் தோட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் டேவிட்சன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கடந்த 25ஆம் திகதி குறித்த இளைஞன் மீது கொதிகலன் ஒன்று வீழ்ந்ததில் கொதிகலனில் இருந்த வெந்நீர் இளைஞனின் உடல் முழுவதும் சிந்தியுள்ளது.  இதனால் குறித்த இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

இதனையடுத்து அவர் மலேசியாவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இம்மாாதம் 5ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இளைஞனின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதிக் கிரியைகள் மஸ்கெலியா பிரவுன்சிவிக் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )