சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும்புதிய விகாரைகளுக்கான அடிக்கற்களாகும் !

சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும்புதிய விகாரைகளுக்கான அடிக்கற்களாகும் !

சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் வடக்கு -கிழக்கில் புதிய விகாரைகளை நிறுவுவதற்கான அடிக்கற்களாகும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று தமிழ் பொது வேட்பாளர் பா. அரிய நேத்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பூநகர் கிராமத்தில் நடை பெற்ற மக்கள் சநதிப்பின்
போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் பிரச்சாரத்தின் கீழ், பா.
அரியநேத்திரன் திருகோணமலையில் இருநாள் பிரசார நடவடிக்
கைளில் ஈடுபட்டிருந்தார்.

தமிழ்த் தேசியபொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு
மக்கள் சந்திப்புகள் திருகோணமலையில் நடைபெற்றிருந்தது.

இரு நாள் பிரசார நடவடிக்கைகளின் இறுதி மக்கள் சந்திப்பு,
அரசியல் ஆய்வாளர் யதீந்திராவின் தலைமை யில், திருகோண
மலை வெருகல் பிரதேசத்திலநடைபெற்றிருந்ததது.

இதன்போது, தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுவின் முடிவு தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன்போதே அரியநேத்திரன் சஜித் பிரேமதாஸவின் கடந்த கால நடவடிக்கைகளை சுட்டிக்காட்யிருந்தார். தீவிரபௌத்தவாதியான பிரேமதாஸ வடக்கு கிழக்கில் ஆயிரத்து நூறு விகாரைகளை கட்டும் திட்டத்தை கொண்டு வந்த ஒருவர்.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் திருகோணமலையின் பல பகுதிகளில் விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டன என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது என்றும் அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )