பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் அதிக வாய்ப்பு !

பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் அதிக வாய்ப்பு !

ஜனாதிபதி தேர்தல் முடிந்து 66 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவ தற்கான வாய்ப்புகள் அதிகமென தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் தனக்கு பொருத்தமான எம்.பி.க்கள் இல்லையென நினைத்தால், பாராளுமன்றம் கலைக்கப்படுமென எதிர்பார்க்க முடியும்.

அவ்வாறானால் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும்.

இதன்படி 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )