குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமைக்கு திரும்பியதும்

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமைக்கு திரும்பியதும்

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசலும் இன்று வழமைக்கு திரும்பியதுடன் கடவுச்சீட்டை நெரிசலின்றி பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளதுடன் பல நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு, டோக்கன் வழங்கவும் பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )