திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞன் தன்னுயிர்மாய்ப்பு

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞன் தன்னுயிர்மாய்ப்பு

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா கும்பேனபயிலு கிராமத்தை சேர்ந்தவர் அருண் (வயது35). இவர் கூலி வேலை செய்து வந்தார். அருணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மன கவலையில் இருந்து வந்தார். இதுகுறித்து தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது அருணுக்கு அவர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று அருண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுயிரைமாய்த்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சிருங்கேரி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிருங்கேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிருங்கேரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )