சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 7 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 7 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதாகவும்
ஒவ்வொரு அறையிலும் 3 முதல் 4 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )