சிறுவர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ள இன்புளுவன்சா வைரஸ்

சிறுவர்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ள இன்புளுவன்சா வைரஸ்

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு சுவாச பிரச்சினை அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இன்புளுவன்சா நோயாளிகளின் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர், “இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், இது குழந்தையின் ஆஸ்துமாவாக இருக்கலாம். இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இப்போதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன.

எனவே, அந்த குழந்தைகளுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். அறிகுறிகள் இருந்தால், முகமூடியை அணியுங்கள், குளிர் காலத்தில் வைரஸ்ஸின் தாக்கம் அதிகரிப்பதால் சிறுவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )