‘பார் பர்மிட்’ கதையை நிரூபித்தால் பதவி விலகத் தயார் !

‘பார் பர்மிட்’ கதையை நிரூபித்தால் பதவி விலகத் தயார் !

தயாசிறி சொல்வது போல் எனக்கு பார் பர்மிட் இலங்கையில் எந்த ஒரு மூலையிலாவது இருக்குமாக இருந்தால் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டு விலக நான் தயாராக இருக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் , இதனை தயாசிறி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர் முன்வைத்த கூற்றை ஏற்று முதுகெலும்பு உள்ளவராக பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவாரா? என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயாசிறி ஜயசேகரவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது பெயரில் நாட்டுக்கு கல்வி வழங்கும் பல நிலையங்கள் இருக்கின்றதென்பதையும் தயாசிறிக்கு சொல்லி வைக்கின்றேன்.

சேறு பூசுவதால் எனது பயணத்தை தடுத்துவிட முடியாது. எனது தெரிவே இந்நாட்டு மக்களின் இம்முறை ஜனாதிபதி தேர்தலின் தெரிவாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எவ்வித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை என் மீது வைத்துள்ளார். அன்று நாடு நன்றாக இருந்த போது, நல்லாட்சி சரிவராது என்று கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்திய பங்காளி இவர். இன்று வங்குரோத்தான நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி, வளர்ச்சி பாதையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தி வருகின்றார்.

மீண்டும் வந்து இவர் சரிவராது என்று இன்னொரு கோட்டாபயவை ஜனாதிபதியாக்க தயாசிறி துள்ளிக் குதிக்கிறார். ஆனால் நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் என்பதே உண்மையாகும். அதற்கு அமைய துணிச்சலாக முன்வந்து அவரின் வெற்றிக்கு எனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன்’ என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )