பயிற்சி பெண் மருத்துவர் கொலை ; இந்தியா முழுவதும் போராட்டம்

பயிற்சி பெண் மருத்துவர் கொலை ; இந்தியா முழுவதும் போராட்டம்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )