ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவுகள்

ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவுகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலின்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், பொதுஜன பெரமுன மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் தமது ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தனர்.

மேலும், ஐக்கிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )