
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்து தனிநபர்களையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசரின் தலைமையில் இன்று (20) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.