வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (17) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 40 மற்றும் 41 வயதுடையவர்கள் ஆவார். 

சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 673 வெளிநாட்டு சிகரட்டுகளும் மற்றையவரிடமிருந்து 205 வெளிநாட்டு சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)