முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் வெட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் வெட்டு

விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர் விநியோகம் தொடர்பான கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )