
திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை யாருக்கும் கையளிக்க முடியாது !
யாழ்ப்பாணம் , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் , அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ் . மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
குறித்த கடித்ததில்,
‘கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ் , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
குறித்த கூட்டத்திற்கு , விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ , விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை எனவே அந்த இணைக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி , அதனை சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறாக விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.
விகாரைக்கு உரிய காணியில் , பௌத்த சமய முன்னேற்றத்திற்கான சைத்யம் , புத்த மெதுரா , போதி, அன்னதான மடம், மடாலயம் , ஓய்வு மண்டப வசதிகள் , தியான மண்டபங்கள் , பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்’ என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.