பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

முறைப்பாடு அளிக்க பொலிஸ் நிலையங்களுக்கு வருகை கரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளியிட்டுள்ள  சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த  சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மேலதிகமாக, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு அளிக்க வருகை தரும் தரப்பினரிடம், முறைப்பாடுகளை ஏற்காமல், பல்வேறு காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படுவதாக எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. 

பொலிஸ் நிலையப் பொறுப்பாளர்களும் பிற அதிகாரிகளும் இத்தகைய மறுப்புக்கு பல்வேறு காரணங்களை முன்வைப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

பொலிஸ் நிலையங்களுக்குப் பதிவாகும் முறைப்பாடுகளை பதிவு செய்து விசாரணை செய்வது பொலிஸ் அதிகாரிகளின் கடமையும் பொறுப்பும் ஆகும். 

அதன்படி, இனிமேல், பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க முடியாது என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)