பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியாவில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியாவில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது

வவுனியா – பெரியார்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று திங்கட்கிழமை 3 ம் திகதி தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அதன் பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையிலான பொலிஸ் குழுவினர் வவுனியா, பெரியார்குளம் பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 50 போதை மாத்திரைகள் இளைஞர் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மாத்திரைகள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இளைஞரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யபட்டவர் வவுனியா பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )