நாட்டில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தயார்
நாட்டின் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஹாலித் அல் அமீரி தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவருடன் அண்மையில் துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இது தொடர்பாக குறிப்பிட்டார்.
இதன்போது தூதுவர் நாட்டின் புதிய சிட்டி டெர்மினல் (கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படக் கூடிய விமான நிலைய முனையத்தின்) முதலீட்டிற்கு இணக்கம் தெரிவித்தார்.