சகோதரியை கொலை செய்த நபருக்கு விளக்கமறியல் ; தாய்க்கு பிணை

சகோதரியை கொலை செய்த நபருக்கு விளக்கமறியல் ; தாய்க்கு பிணை

கம்புருபிட்டியவில் தனது சகோதரியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 வயது நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 14, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அவரது 76 வயது தாயார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறையில் உள்ள அவரது வீட்டிற்குள் தலையில் காயங்களுடன் 33 வயது சகோதரி இறந்து கிடப்பதை பொலிஸார் கண்டறிந்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர்களின் தாயார் மயக்கமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கம்புருபிட்டிய பொலிஸார் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )