19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று !
19 வயதுக்கு உட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரில் ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய மகளிர் அணியுடனான முதலாவது அரையிறுதி போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவானது.
இதனையடுத்து, இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற 2 ஆவது அரையிறுதி போட்டியில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.