
Clean Sri lanka வேலைத்திட்டமானது மனிதாபிமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டிய ஒரு சிக்கலான வேலைத்திட்டம்
தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “Clean Sri lanka” வேலைத்திட்டமானது மனிதாபிமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டிய ஒரு சிக்கலான வேலைத்திட்டம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள மாவட்டச் செயலகத்தில் நேற்று (29)இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.